பாலியல் துன்புறுத்தல் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்; ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: பாலியல் துன்புறுத்தல் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதும், பாலியல் துன்புறுத்தலால் இறக்கும் கடைசி பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்று உருக்கமாக கடிதம் எழுதியுள்ள செய்தியும் என்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |20 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment