சென்னை: பொதுமக்கள் பார்வையிட தடை விதித்திருப்பதால் சசிகலா சென்னை வந்தால் ஜெயலலிதா நினைவிடம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 7ம் தேதி சசிகலா சென்னை வரவிருப்பதாக தகவல் வெளியான நிலையில் ஜெயலலிதா நினைவிடம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையின் தடை விதிப்பால் பெங்களூருவில் இருந்து வரும் சசிகலா ஜெயலலிதா நினைவிடம் செல்ல முடியாது. சிறை செல்லும் முன் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா சபதம் எடுத்து விட்டு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
from Dinakaran.com |02 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment