வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா?: அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா? என தமிழக அரசு பிற்பகல் 2.15 மணிக்குள் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சட்டத்தை அமல்படுத்துவதாக அரசாணை பிற்ப்பிக்கப்பட்டுள்ளதாக முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சமுதாயத்துக்கு இடஒதுக்கீடு வழங்கியதன் மூலம் விளிம்புநிலை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.



from Dinakaran.com |28 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment