இயற்கை வளங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து காற்றாலை அமைப்பதை ஏற்க முடியாது!: ஐகோர்ட் கருத்து

சென்னை: இயற்கை வளங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து காற்றாலைகள் அமைப்பதை ஏற்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காற்றாலை போன்ற இயற்கை எரிசக்தி திட்டம் நாட்டுக்கு அவசியம் தான்; அதற்காக இயற்கையை அழிக்கக்கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு கன்னிவாடியில் அனுமதி பெறாமல் நீர்நிலை, சாலையை ஆக்கிரமித்து காற்றாலை என வழக்கு தொடரப்பட்டிருந்தது. நீர்நிலை, சாலைகளை ஆக்கிரமித்து 349 காற்றாலைகளை தனியார் நிறுவனம் அமைந்துள்ளதாக சுரேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். ஒன்றிய, மாநில அரசுகள், காற்றாலை நிறுவனம் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.



from Dinakaran.com |30 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment