கரூர் டி.என்.பி.எல். காகித ஆலையில் கோடிக்கணக்கில் முறைகேடு செய்த 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்..!!

கரூர்: கரூர் டி.என்.பி.எல். காகித ஆலையில் கோடிக்கணக்கில் முறைகேடு செய்த அதிகாரிகள் 2 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முதன்மை பொது மேலாளர் பாலசுப்ரமணியம், தரக்கட்டுப்பாட்டு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். டி.என்.பி.எல். காகித ஆலைக்கு வெளிநாடுளில் இருந்து டாலர் பரிவர்த்தனை மூலம் டன் கணக்கில் நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தரமற்ற நிலக்கரி வாங்கியதில் கடந்த 4 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |31 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment