முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருந்து பறிப்பு?

டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 மாணவர் சேர்க்கை தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அகில இந்திய தொகுப்பு இடங்களுடன் மாநில அரசின் இடங்களுக்கும் ஒன்றிய அரசே மாணவர் சேர்க்கை நடத்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசின் மருத்துவத்துறை தலைமை இயக்குனருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.



from Dinakaran.com |31 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment