மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமை ஆகாமல் மத்திய, மாநில அரசுகள் தான் தடுக்க முடியும்!: ஐகோர்ட் கருத்து

சென்னை: மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமை ஆகாமல் மத்திய, மாநில அரசுகள் தான் தடுக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மார்ட்டின் ஜெயக்குமார் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டை தடை செய்யவும், ஆய்வு செய்து கண்காணிக்கும் நடைமுறையை கொண்டு வரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆன்லைன் விளையாட்டு கதாபாத்திரமாகவே குழந்தைகள் மாறுவதோடு, வன்முறை எண்ணங்களுக்கு ஆளாகின்றனர் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



from Dinakaran.com |01 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment