சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 5 நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை உருவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
from Dinakaran.com |28 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment