ஜவ்வரிசியில் கலப்படத்தை தடுக்க தனிக்குழு அமைக்கப்படும்: ஆத்தூரில் விவசாயிகள், ஜவ்வரிசி ஆலை பிரதிநிதிகளுடன் முதல்வர் கலந்துரையாடல்

சேலம்: மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள், ஜவ்வரிசி ஆலை பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடி வருகிறார். ஆத்தூரில் நவீன முறையில் செயல்படும் தனியார் ஜவ்வரிசி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். சேலம் மாவட்டத்தில் 11 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. ஜவ்வரிசி உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார். 55ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொழில் முதலீடுகள் கையெழுத்தாகியுள்ளன. ஜவ்வரிசியில் கலப்படத்தை தடுக்க தனிக்குழு அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.



from Dinakaran.com |29 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment