டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் அல்வாரை சேர்ந்த டிங்கு ராம், ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்தார். இன்றைய தினத்துக்கான அட்டவணைப்படி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். பாதுகாப்பு பணிக்காக வைத்திருந்த தனது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு டிங்குராம் தற்கொலை செய்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் பிரபல ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டார். டெல்லி நீதிமன்றங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
from Dinakaran.com |29 Sep 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment