சென்னை: உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோவை பாதுகாக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 60 நாட்கள் வரை வீடியோ பதிவுகளை பாதுகாக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் முறைகேடு தொடர்பாக புகார்கள் வந்தால் வீடியோ பதிவுகளை பெற்று பாதுகாக்க வேண்டும் என கீழமை நீதிமன்றங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
from Dinakaran.com |29 Oct 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment