தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுயற்சியால் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுயற்சியால் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூரில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.



from Dinakaran.com |02 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment