சென்னை: 2020 - 21ல் முதல் 10 மாதங்களில் கலால் வரியாக மட்டும் ரூபாய் 2 லட்சத்து 94 ஆயிரம் கோடி வரியை பாஜக அரசு விதித்துள்ளது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் எரிபொருட்களின் விலையை வரலாறை காணாத வகையில் பாஜக அரசு உயர்த்தியுள்ளது. பாஜக அரசை கண்டித்து ஜூலை 7 முதல் 17 வரை பலகட்ட போராட்டங்களை நடத்த காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் போராட்டங்களை நடத்தும் என்று கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டிருக்கிறார்.
from Dinakaran.com |02 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment