சென்னை: தற்போது கூட பொதுச்செயலாளர் என்ற முகவரியிட்டே தொண்டர்களிடம் இருந்து ஏராளமான கடிதங்கள் வருகின்றன என்று சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் தம்முடனே உள்ளதாக சசிகலா பேசியுள்ளார். சி.வி.சண்முகம் பிரச்னை குறித்த பேச்சுக்கு அதெல்லாம் காற்றில் பறக்கும் கண்ணுக்கு தெரியாத தூசி போன்றது என்று சசிகலா பதில் அளித்துள்ளார். அனைவரும் பார்த்து வியக்கும்படி தனது செயல்பாடு இருக்கும் என்றும் தொண்டர்களிடம் சசிகலா உறுதி அளித்துள்ளார்.
from Dinakaran.com |02 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment