சென்னை: இன்று மாலை 4 மணிக்கு சென்னை ஐஐடியை முற்றுகையிட தந்தை பெரியார் திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. சென்னை ஐஐடி சாதிவெறியின் ஊற்றாக திகழ்ந்து வருவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் சாடியுள்ளது. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் சென்னை ஐஐடி உயர்சாதியினருக்காக மட்டுமே இயங்கி வருகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்று வரை ஐஐடி கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அமல்படுத்தவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
from Dinakaran.com |02 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment