ஆவடி: தமிழர் நாகரிகத்துக்கு முற்றிலும் எதிரான சிந்தனை கொண்டவர் அமைச்சர் பாண்டியராஜன் என ஆவடி திமுக வேட்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். கீழடி ஆராய்ச்சியை 'தமிழர் நாகரிகம் அல்ல பாரதம் நாகரிகம்' என்று பேசி தமிழகருக்கு எதிரான சிந்தனையில் உள்ளார். தமிழர்களுக்கு எதிரான சிந்தனை கொண்ட பாண்டியராஜனை ஆவடி மக்கள் தோற்கடித்தே தீருவர் என்று சா.மு.நாசர் கூறியுள்ளார். ஆவடியில் திமுக வேட்பாளர் சா.மு.நாசர் இருசக்கர வாகனத்தில் வந்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். 'கீழடி தமிழர் நாகரிகம் அல்ல பாரத நாகரிகம் என்று கூறி ஆர்.எஸ்.எஸ் பாசத்தை வெளிப்படுத்துகிறார் பாண்டியராஜன்' என்று குற்றம் சாட்டுகிறார்.
from Dinakaran.com |01 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment