திருவொற்றியூர்: திருவொற்றியூரில் குடியிருப்பு இடிந்து விழுந்த இடத்தில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். கட்டட இடிபாடுகளை ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டு வருகிறார். மீட்பு பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் செய்தார். விரிசல் ஏற்பட்டவுடன் மக்கள் வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது எனவும், பாதிக்கப்பட்ட மக்கள் திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என கூறினார்.
from Dinakaran.com |27 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment